தினமும் துளசி இலைகளை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்? ஏதேனும் பக்க விளைவுகள் உள்ளதா?
மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி கைவைத்தியத்தில் சளி இருமல் போன்ற தொற்றுகளை தடுக்க கைவைத்தியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த துளசியை தினமும் இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் என்னென்ன என்பது குறித்து இப்போது தெரிந்துகொள்வோம்.
உடல் நச்சை நீக்கும்
உடலில் நச்சு முழுமையாக வெளியேறினாலே ஆரோக்கியம் மேம்படும். நச்சு நீக்கும் பானமாக துளசி இலைகள் செயல்படும்.
காலை நேரத்தில் துளசி இலை ஊறவைத்த நீரை குடிப்பது உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறினாலே உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உற்சாகமாக இருக்கும்.
செரிமானத்தை மேம்படுத்தும்
வயிற்று உப்புசம், வாய்வு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுகோளாறுகள் அஜீரணத்தை தூண்டலாம். இந்த அறிகுறியை கட்டுப்படுத்த துளசி நீர் உதவும்.
துளசி உடல் நச்சு நீக்குவது போன்று ஆரோக்கியமான செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் செய்கிறது. செரிமானம் மேம்படுவதால் குடல் இயக்கம் மேம்படும். நெஞ்செரிச்சல் அமில ஃரிப்ளக்ஸ் போன்றவற்றை சமப்படுத்துகிறது. ஆரோக்கியமான செரிமானத்தை உறுதிப்படுத்தவும் துளசி நீர் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
துளசி ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளன. காலையில் ஒரு கப் துளசி நீர் குடிப்பது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். தொற்றுநோய் தாக்கத்திலிருந்து காப்பாற்றும்.
இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து எதிர்த்து போராடுகிறது. உடலில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்குகிறது.
மன அழுத்தம் இல்லாம இருக்க துளசி ஊறவைத்த நீர்
துளசி இலைகளில் அடாப்டொஜென்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள மன அழுத்தத்தை குறைக்க செய்கிறது. இது நரம்பு மண்டலத்தை தளர்த்தவும் இரத்த ஓட்டம் அதிகரிக்கவும் செய்வதால் ஐம்புலன்களும் மேம்படுகிறது.
காலையில் வேலை தொடங்கும் போதே மன அமைதியுடன் துவங்குவதாக இருந்தால் துளசி ஊறவைத்த தேநீர் குடிப்பது நாள் முழுக்க அமைதியாக வைத்திருக்க செய்யும்.
சக்கரையின் அளவை குறைக்கும்
துளசியின் கணைய செல்களின் செயல்பாட்டை ஆதரிக்கும் கூறுகள் உள்ளன. இது இன்சுலினை மேலும் அதிகரிக்க செய்கிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க செய்கிறது. துளசி கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தை எளிதாக்குகிறது.
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை ஆற்றலுக்காக பயன்படுத்துவதை மேலும் உறுதி செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் தினசரி துளசி நீரை குடித்துவருவது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.