நான் ஒன்றும் கற்பழிப்பாளர் அல்ல; அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆவேசம்!
நீங்கள் மோசமான மனிதர்கள் நான் ஒன்றும் கற்பழிப்பாளர் அல்ல, யாரையும் கற்பழிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தின் பின் ஜனாதிபதி டிரம்ப் அளித்த பேட்டியில்,

டிரம்ப் ஆவேசம்
துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் தாமஸ் ஆலன் தனது அறிக்கையில், நிர்வாக அதிகாரிகள் என் கைகளில் ஒரு பீடோஃபைல் (Pedophile – சிறார் பாலியல் குற்றவாளி), கற்பழிப்பாளர் மற்றும் துரோகியின் கறையைத் துடைக்க அனுமதிக்க மாட்டேன் என்று எழுதியிருந்ததை டிரப்பை பேட்டி எடுத்த நோரா வாசித்தார்.
இதைக் கேட்ட டிரம்ப், “நீங்கள் இதைக் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நீங்கள் மோசமான மனிதர்கள். நான் ஒன்றும் கற்பழிப்பாளர் அல்ல, யாரையும் கற்பழிக்கவில்லை என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.
பத்திரிகையாளர் நோரா, துப்பாக்கிதாரி உங்களைக் குறிப்பிடுவதாக நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, டிரம்ப் மேலும் கோபமடைந்தார். “என்னை மன்னித்துவிடுங்கள், நான் ஒன்றும் பீடோஃபைல் கிடையாது.
ஒரு நோயாளி எழுதிய குப்பைகளை நீங்கள் ஏன் இங்கு வாசிக்கிறீர்கள்? எனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் எல்லாம் என் பெயரை இணைக்கிறார்கள். இதிலிருந்து நான் ஏற்கனவே முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டேன்” என்று தனது சீற்றத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், துப்பாக்கிதாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அநாகரிகமான வார்த்தைகளை ஒரு தேசிய ஊடகத்தில் வாசிப்பது ஒரு “அவமானம்” என்றும், அதற்காக அந்தப் பத்திரிகையாளர் வெட்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கடுமையாகச் சாடினார்.
இந்த விவாதத்தின் போது, மறைந்த குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) விவகாரத்தையும் டிரம்ப் குறிப்பிட்டுப் பேசினார். உங்களது நண்பர்களான ஜனநாயகக் கட்சியினர்தான் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தனர்.
நான் இந்த அறிக்கையைப் படித்தேன், அவன் ஒரு மனநோயாளி. ஆனால் நீங்கள் அதைச் செய்தியில் வாசிப்பது ஒரு கேவலமான செயல் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுவது தொடர்பாக அமெரிக்காவில் விவாதங்கள் நடந்து வரும் சூழலில், டிரம்ப் இவ்வாறு பதிலளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் ஆலன் ஒரு “கிறிஸ்தவ எதிர்ப்பு” கொள்கை கொண்ட நபர் என்றும், அவர் திட்டமிட்டுத் தனது நிர்வாகத்தைக் குறிவைத்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்தபோது தான் கவலைப்படவில்லை என்றும், என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதேசமயம் , துப்பாக்கிதாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மோசமான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் பொதுவெளியில் விவாதிப்பதற்கு டிரம்ப் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.