யாழில் TikTok காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி; முன்னாள் காதலன் அரங்கேற்றிய சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் டிக்-டொக் (TikTok) காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயதுச் சிறுமியைப் பொலிஸார் மீட்டு விசாரணை நடத்தியபோது, அவர் ஏற்கனவே மற்றொரு நபரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இளவாலை மாதகல் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிக்-டொக் செயலி மூலம் அறிமுகமான, நெல்லியடி பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவருடன் குறித்த 15 வயதுச் சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

விசாரணையில் வெளியான தகவல்
இது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, நெல்லியடி பொலிஸாரின் உதவியுடன் அந்த ஜோடியை இளவாலை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடத்திய விசாரணையில்,
"சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றது உண்மைதான்; ஆனால் அவருடன் தவறாக நடக்கவில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சட்ட நடைமுறைகளின்படி சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்துச் சிறுமியிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, தற்போதைய காதலனுடன் செல்வதற்கு முன்பாக, தனது பகுதியைச் சேர்ந்த 21 வயதான முன்னாள் காதலன் ஒருவனால் தான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாக அச்சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, அவரது முன்னாள் காதலனையும் பொலிஸார் உடனடியாகக் கைது செய்தனர்.

இரு காதலர்கள் மீதும் வழக்கு பதிவு
தற்போது 21 வயதுடைய முன்னாள் மற்றும் தற்போதைய காதலர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை யாழில் இளம் பிள்லைகள் மற்றும் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமயாகியுள்ளதுடன், போதை பழக்கங்களுக்கும் அடிமயாகி வரும் நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகளை மிகவும் கவனித்தால் மட்டுமே பிள்லைகளை சீரழிவில் இரு காப்பாற்றி நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.