கடும் எதிர்ப்பையும் மீறி மஹிந்த கட்சிக்கு கிடைத்த வெற்றி!
இரண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றிகள் கம்பளை மற்றும் பாணந்துறை உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இது எமக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும், இது எதிர்க்கட்சிகளின் கூற்றுக்கள் இருந்தபோதிலும் எங்களின் ஆதரவுத் தளம் எங்களுடன் இருப்பதைக் காட்டுகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூத்த எம்.பி தெரிவித்துள்ளார்.
பாணந்துறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், சபையின் மொத்தமுள்ள 87 ஆசனங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான குழு 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாணந்துறை உள்ளூராட்சி சபையில் எதிர்க்கட்சி தலைமையிலான குழு 34 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான குழு கம்பளை உள்ளுர் கூட்டுத்தாபன சபையை பிரதிநிதித்துவப்படுத்த 06 ஆசனங்களை வென்றுள்ளது.
எதிர்க்கட்சி தலைமையிலான குழு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.