வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்
ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள், வெரஹெரவிலுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் இன்று (08) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் நடைமுறைகளில் (Procurement Procedures) ஏற்பட்ட தாமதங்கள் காரணமாகவே இந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, தற்போது அந்த தடைகள் அனைத்தும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சுமார் 150,000 வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அனைத்தும் வரும் மாதங்களில் முழுமையாக நிறைவு செய்யப்படும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டு தயாரானதும், அது குறித்து வாகன உரிமையாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் புதிய குறுஞ்செய்தி (SMS) அறிவிப்பு முறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.