வவுனியாவில் பாரிய விபத்து சம்பவம்: 6 பேருக்கு நேர்ந்த விபரீதம்
Srilanka
vavuniya
Mannar
BusAccident
Poovarasankuppam
By Shankar
பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்து சம்பவம் வவுனியா பூவரசங்குளம் பகுதியில் இன்று (15-12-2021) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த அரசு பேருந்து, அதே திசையில் பயணித்த தனியார் பேருந்தும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றது.

இவ் விபத்தின் போது அரச பேருந்தில் பயணித்த 6 பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US