இஸ்லாமாபாத்தில் ரத்தக்கறை படிந்த புத்தக பைகள்; உலகை உலுக்கும் ஈரானின் செயல் !

Donald Trump United States of America Pakistan Death Iran-Israel War
By Sulokshi Apr 11, 2026 09:04 AM GMT
Report

  இஸ்லாமாபாத் மாநாட்டு அரங்கிற்கு வெளியே இரத்தம் படிந்த பள்ளிப் பைகள் புகைப்படங்கள், ஈரானில் ஈவிரக்கமின்றி அமெரிக்க இஸ்ரேல் கூட்டுட் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளின் நினைவாக வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று (ஏப்ரல் 11, 2026) அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி மாநாடு நடைபெற உள்ளது.

இஸ்லாமாபாத்தில் ரத்தக்கறை படிந்த புத்தக பைகள்; உலகை உலுக்கும் ஈரானின் செயல் ! | Us Iran Peace Talks Blood Soaked School Bags

 168 குழந்தைகளின் உயிர்களுக்கு அமெரிக்கா என்ன பதில் சொல்லப் போகிறது

இந்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, ஈரானியத் தரப்பிலிருந்து ‘Minab-168’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது வெறும் வார்த்தையல்ல, கடந்த மார்ச் 1-ஆம் தேதி ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட 168 பிஞ்சு குழந்தைகளின் நினைவாக வைக்கப்பட்ட குறியீடாகும்.

எங்கள் கைகள் இப்போதும் துப்பாக்கியின் விசையின் மீதே உள்ளன; ஈரான் உயர் தலைவர் சபதம்! புஸ்வானமாகுமா பேச்சுவார்த்தை!

எங்கள் கைகள் இப்போதும் துப்பாக்கியின் விசையின் மீதே உள்ளன; ஈரான் உயர் தலைவர் சபதம்! புஸ்வானமாகுமா பேச்சுவார்த்தை!

பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு முன், அமெரிக்கா செய்த இந்த ‘மன்னிக்க முடியாத’ குற்றத்தை உலகிற்கு நினைவூட்டுவதே ஈரானின் நோக்கம். மினாப் பகுதியில் உள்ள ‘ஷஜரே தய்யிபே’ (Shajareh Tayyebeh) என்ற சிறுமிகள் பள்ளியின் மீது மூன்று ஏவுகணைகள் விழுந்ததில், சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் உடல் சிதறிப் பலியாகினர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தை ‘Minab-168’ என்ற குறியீடு மூலம் ஈரான் தற்போது ஒரு சர்வதேச அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. அமைதி பற்றிப் பேசுவதற்கு முன், இந்தப் 168 குழந்தைகளின் உயிர்களுக்கு அமெரிக்கா என்ன பதில் சொல்லப் போகிறது?” என்ற கேள்வியை ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் எழுப்பியுள்ளார்.

தமிழர் பகுதியில் பயங்கரம்; வாடகை தகராறில் இடம்பெற்ற கொலை

தமிழர் பகுதியில் பயங்கரம்; வாடகை தகராறில் இடம்பெற்ற கொலை

இந்தப் போர் 40 நாட்களைத் தாண்டியுள்ள நிலையில், ஈரானின் இந்தத் திடீர் ‘உளவியல் போர்’ அமெரிக்கக் குழுவினருக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் இஸ்லாமாபாத் வந்தடைந்த நிலையில், நகரெங்கும் ஈரானிய ஆதரவாளர்கள் இந்தக் குழந்தைகள் கொல்லப்பட்ட புகைப்படங்களை ஏந்திப் போராடி வருகின்றனர்.

ராணுவ ரீதியாக அமெரிக்காவை எதிர்க்க முடியாவிட்டாலும், இத்தகைய உணர்ச்சிகரமான ‘சிம்பாலிசம்’ (Symbolism) மூலம் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்ட ஈரான் முயல்கிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிரான மனநிலையைத் தூண்ட ‘Minab-168’ ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கு QR தேவை இல்லை!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கு QR தேவை இல்லை!

அமெரிக்கா இந்தத் தாக்குதலை ஒரு “துரதிர்ஷ்டவசமான விபத்து” என்று கூறி வரும் நிலையில், ஈரான் இதனை ஒரு “திட்டமிடப்பட்ட படுகொலை” என்றே சாடுகிறது. இன்று மதியம் தொடங்க உள்ள பேச்சுவார்த்தையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது மற்றும் அணுசக்தி விவகாரங்கள் குறித்துப் பேசப்பட வேண்டும்.

ஆனால், ‘Minab-168’ விவகாரம் முன்னிலைக்கு வந்துள்ளதால், ஈரான் முதலில் அமெரிக்காவிடம் பகிரங்க மன்னிப்பு அல்லது இழப்பீடு கோர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் பிஞ்சு குழந்தைகளின் ரத்தக்கறை படிந்த புத்தகங்களின் புகைப்படங்கள் இஸ்லாமாபாத் மாநாட்டு அரங்கிற்கு வெளியே திரையிடப்பட்டுள்ளன. ஈரானின் இந்தத் துணிச்சலான மற்றும் உணர்ச்சிகரமான நகர்வு, அமைதிப் பேச்சுவார்த்தையின் போக்கை முற்றிலும் மாற்றக்கூடும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இன்று அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை ; பரபரப்பில் உலகம்

பாகிஸ்தானில் இன்று அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை ; பரபரப்பில் உலகம்

மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US