களனிப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது!
மருத்துவ பீடம் தவிர்ந்த களனிப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கும் அதேவேளை அனைத்து மாணவர்களும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 05) காலை 8.00 மணிக்கு முன்னர் அந்தந்த விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இரவு இடைவேளை அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.
மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மத்தியில் இதுவரை நிலவிய அமைதியான சூழல் சவாலுக்கு உள்ளாகியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை மீள நிறுவுவதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, களனிப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய தளுகமவில் உள்ள பல்கலைக்கழக வளாகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் அனைத்து உள் மற்றும் வெளி விடுதிகள் மறு அறிவித்தல் வரையில் மருத்துவ பீட மாணவர்கள் தவிர்ந்த மாணவர்களுக்கு இதன்மூலம் தடைசெய்யப்பட்ட பகுதிகள் எனவும் அவர் அறிவித்தார்.