கனடிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் பதவியேற்பு
கனடிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் மீண்டும் பதவியேற்பு வெளிவிவகார மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சர்களாக பதவியேற்றனர்
ஏப்ரல் 28ஆம் நாள் கனடாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை அடுத்து புதிய பிரதமர் மார்க் கானி தலைமையிலான புதிய அரசின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது.
ரூடோ தலைமையிலான அரசில் அமைச்சர்களாக இருந்த பலர் இவ் அமைச்சரவையில் இரூக்க மாட்டார்கள் என்ற செய்தி பரவிய நிலையில் முன்னர் அமைச்சர்களாக இருந்த இரண்டு தமிழர்களும் இன்றும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முன்னர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சராக பதவி வகித்த இந்திரா அனிதா ஆனந்த் தற்போது கனடாவின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றார்.
அதேவேளை கனடிய பூர்வீக குடிகள் விவகாரம் மற்றும் நீதி சட்டமா அதிபர் திணைக்கள அமைச்சராக இருந்த கரி ஆனந்தசங்கரி பொது பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார்.
I am deeply honoured and humbled to be sworn in as Minister of Public Safety.
— Gary Anandasangaree (@gary_srp) May 13, 2025
I look forward to building on the good work of David McGuinty, and I am committed to serving Canadians by keeping our communities safe, combatting hate, and strengthening our security agencies. pic.twitter.com/CTn4grUzyo