யாழில் வீடுகளிலிருந்து எரிவாயு சிலிண்டர்களை திருடிய இருவருக்கு நேர்ந்த கதி!
யாழில் கடந்த சில தினங்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் எரிவாயு சிலிண்டர்கள் திருடிய இருவர் யாழ் குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று (26-10-2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10ற்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் போதைப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காகவே எரிவாயு சிலிண்டரை திருடியதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியில் சேந்தவர்கள் எனவும் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமச்சந்திர தலைமையிலான பொலிஸ் அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது,