பீல்ட் மார்ஷல் பதவிக்கு சிக்கல்!
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்துக்காக கொழும்புக்கு வருமாறும், உயிரைத் தியாகம் செய்யுமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடதக்கது .