திருமலையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்! ஆபத்தான நிலையில் ஒருவர்
திருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு (19-02-2022) திருகோணமலை - கொட்பே மீன்பிடி கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரு குழுக்களைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் கூறியுள்ளார்.
மோதலில் காயமடைந்தவர்கள் சீனக்குடா கொட்பே மீன்பிடி கிராமத்தில் வசித்து வரும் 22 வயது 26 வயது மற்றும் 40 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் மேலதிக தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.