புதிய முனையத்திற்கு மாறும் திருச்சி விமான நிலையம் ; பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் முனையமானது இன்னும் ஓரிரு நாட்களில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்துள்ளது.
எதிர்வரும் 2024 ஜீன் 11 அன்று காலை 6.00 மணி முதல் திருச்சி விமான நிலையம் செல்லும் மற்றும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும்.
மேலும், பழைய பயணிகள் முனையத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சேவைகளும் முழுமையாக புதிய முனையத்திற்கு மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மலேசிய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா (Air Asia) அதன் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றைய வெளியிட்டுள்ளது.
அதாவது, அனைத்து விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்திற்கு செயல்படும் என்று ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் காரணமாக இம்முனையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக பயணிகளைக் கையாள்கிறது திருச்சி விமான நிலையம்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. புதிய விமான முனையத்தில், மொத்தமாக 19 விமான நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது பழைய முனையம் 11,700 சதுர மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிய முனையம் 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
தற்போது ஒரே சமயத்தில் 650 பயணிகளைக் கையாள முடியும் எனில், புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும் இந்த எண்ணிக்கை 3,480ஆக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூன் 11ஆம் திகதி புதிய முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ஐந்து மாத தாமதத்துக்குப் பின்னர் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வருவது பயணிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளது.