லண்டனில் நடந்த “தேச அபிமானி” ஆனந்தியின் நினைவஞ்சலி
லண்டன் ஹரோவில், BBC ஊடகவியலாளர் “தேச அபிமானி” ஆனந்தியின் நினைவஞ்சலி இனிதாக நடைபெற்றது.
இந்தியா ருடே நிருபர்கள், லண்டனை தளமாக கொண்டு இயங்கும், டெயிலி மெயில் பத்திரிகை நிருபர்கள், புதியதலைமுறை TV நிருபர்கள் என பல்லின ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார்கள், முழுக்க முழுக்க துறை சார் வல்லுனர்கள் , கலந்துகொண்ட இன் நிகழ்வில் பேசிய பலரும், தேச அபினானி ஆனந்தி அக்காவைப் பற்றி பல அரிய தகவல்களை வெளியிட்டார்கள்.
நாடு கடந்த அரசின், பிரதமர் திரு.ருத்திரகுமாரன் அவர்களின் இரங்கல் செய்தியும் வாசிக்கப்பட்டது.
மேலும் லேபருக்கான தமிழர் அமைப்பு, காண்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களும் இதில் கலந்துகொண்டதோடு.
முன்னாள் ஹரோ மேயர் சுரேஷ் கிருஷ்ணாவும் கலந்துகொண்டு சிறப்பு உரை ஆற்றி இருந்தார்கள். இதேவேளை ஹரோ மேயர் , 1970 களில் BBC வானொலி எப்படி செயல்பட்டது என்பது தொடர்பாக அரிய தகவல்களை வெளியிட்டும் இருந்தார்.
கணா சொலிசிட்டர் அவர்களும் சிறப்புரை ஆற்றி இருந்தார்கள். தங்கக் குரல் குணா அவர்கள் நிகழ்ச்சியை நெறிப்படுத்த , அவருடன் GTV தினேஷ் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை தாங்கி இருந்தார்.
பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பின் அனுசரணையோடு இன் நிகழ்வு இடம்பெற்று இருந்தது. இந்த அமைப்பில் 189 ஊடகவியலாளர்கள் உலக ரீதியாக அங்கத்தும் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்