மட்டக்களப்பு வாகரை மண்ணில் இப்படி ஒரு அவலம்
வாகரையில் இருந்து வாழைச்சேனைக்கு வாகரை போக்குவரத்து நிலையம் கொண்டு செல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு என சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்,
மேலும் அபிவிருத்து என்று கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் அவரின் கட்சியுமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் இராஜாங்க அமைச்சரின் நிலைப்பாடுதான் என்ன என கேட்டுள்ளார்,
வாகரை மக்களை சொல்லித்தான் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு பல வழங்களை கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் இருந்த நிலையத்தை வினைத்திறன் கொண்டோரை கொண்டு நடாத்தாது இப்படி கொண்டு செல்வதை எப்படி பார்ப்பது.
இன்னும் வாகரை என்றால் கவனத்தில் கொள்ளாத நிலையில் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை இருப்பது ஏன். எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
யுத்தத்தால் மிகவும் பாதிக்கப் பட்ட வாகரைப் பிரதேசம் இலங்கையில் ஒரு முன்னேற்றம் காணாத பகுதி என்பதுடன், அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல் வாதிகளின் விணைத் திறனால் வெகு விரைவில் வாகரை மண் பெரும் அவலத்தைச் சந்திக்கும் என மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.