அன்றும் இன்றும் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு இவர்களே முட்டுக்கட்டை!

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Sulokshi Feb 03, 2023 01:10 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  அன்று பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கு காரணமான மகாநாயக்கர்களே, இன்று மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் விடயத்திலும் தடையாக இருக்கின்றார்கள் என த. தே. கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் விசனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமாசிங்க மகாநாயக்கர்களை சந்தித்தபோது மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கக் கூடாது விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

அன்றும் இன்றும் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு இவர்களே முட்டுக்கட்டை! | They Are The Stumbling Block Solution Then And Now

சுதந்திரத்திற்கு முன்பாக இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை தரப் போவதாகவும், அதன் ஒரு அம்சமாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுலாக்கம் செய்யப்போவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கக் கூடாது 

எனினும் , நேற்று முன்தினம் ஜனாதிபதி அவர்கள், மகாநாயக்க தேரர்களை சந்தித்த போது, 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கூடாது என்றும் குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அன்றும் இன்றும் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு இவர்களே முட்டுக்கட்டை! | They Are The Stumbling Block Solution Then And Now

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தொடர்ந்து 75 ஆண்டுகளாக இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதற்கான பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், பேச்சுவார்த்தைகள் என்பன முன்னெடுக்கப்பட்டாலும், அவை அனைத்தும் பேரினவாத சக்திகளினால் தடைப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.

அந்த வரிசையில் தற்போது 13ஆவது திருத்தத்தை கூட முழுமையாக அமுல்படுத்தக் கூடாது எனும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு தீர்வு கிட்டாது என்பதும், உள்நாட்டு பொறிமுறைகள் மூலமாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

அதனால் சர்வதேச பொறிமுறை ஒன்று தான் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேவழி எனும் விடயம் மகாநாயக்கர்களின் இந்த கருத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அன்றும் இன்றும் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு இவர்களே முட்டுக்கட்டை! | They Are The Stumbling Block Solution Then And Now

1956ஆம் ஆண்டில் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கும், தற்போது மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்திலும் இதே மகாநாயக்கர்கள் தான் தடையாக இருக்கின்றார்கள்.

எனவே இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இதன்போது கோரிக்கை முன்வைத்தார்.

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US