யாழில் பயங்கரம்; மனைவிக்கு தீ மூட்டிய கணவன் தலைமறைவு!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (25) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயதான பெண் எரிகாயங்களுக்கு உள்ளானவராவார். திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் கணவன் - மனைவ்க்கு இடையில் அடிக்கடி தகராறு இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடிக்கடி தகராறு
இந் நிலையில், கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கணவன் தப்பி சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.