பாடசாலை மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி துஸ்பிரயோகம்; ஆசிரியரின் குட்டு அம்பலம்
15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கிரிபத்கொடை பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

மேலதிக வகுப்பு
குறித்த மாணவி பாட நடவடிக்கைகளுக்காக மேலதிக வகுப்பு ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில், அந்த மேலதிக வகுப்பு ஆசிரியர், மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரது கையடக்கத் தொலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான மேலதிக வகுப்பு ஆசிரியர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு கிரிபத்கொடை பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.