கடற்றொழிலாளர்களிள் விடுதலையை வலியுறுத்தி தமிழக கடற்றொழிலாளர்கள் போராட்டம்
இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, இன்று தமிழக கடற்றொழிலாளர்கள் தொடருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதன்படி, தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர் சங்கம் சார்பில், இன்று மாலை 4 மணிக்கு இராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் விரைவு தொடருந்தை மறித்துக் கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த நிலையில், கடற்றொழிலாளர்களுடன் இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.
எனினும், கடற்றொழிலாளர்கள், பேச்சுவார்த்தைக்கு உடன்படாத நிலையில் அங்கு இருந்து வெளியேறினர்.
இதனையடுத்தே, இன்று தொடருந்து மறியல் போராட்டம் நடைபெறும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.