சதொச பல்பொருள் அங்காடி பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழி மாயம்!
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சதொச பல்பொருள் அங்காடிகளில் மாற்றப்படும் புதிய பெயர் பலகைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாரு தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்படுவது கண்டிக்க தக்க விடயமென இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், அண்மைக்காலமாக சதொச பல்பொருள் அங்காடிகளில் மாற்றியமைக்கப்படும் புதிய பெயர் பலகைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் அரச கரும மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் உள்ளன. சிங்களம் மற்றும் தமிழ் மக்கள் பயன்படுத்தும் அங்காடியாக சதொச உள்ளது.
இவ்வாறான நிலையில் , தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன், தேசிய மொழிகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழ் மொழி புறக்கணிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.