நாசா விண்வெளி வீராங்கனை வெளியிட்ட பிரமிக்கத்தக்க புகைப்படம்
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள நாசா விண்வெளி வீராங்கனை ஜெசிகா மெய்ர் (Jessica Meir), அமேசான் காடுகளின் ஊடாக வளைந்து செல்லும் உகாயாலி (Ucayali) ஆற்றின் மிக அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மத்திய பெரு பகுதியில் அமைந்துள்ள இந்த உகாயாலி ஆறு, அமேசான் ஆற்றின் பிரதான ஆரம்ப புள்ளிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

சுமார் 1,600 மைல்கள் நீளம் கொண்ட இந்த ஆற்றுப் பகுதி, டொல்பின்கள், ஜாகுவார் சிறுத்தைகள் மற்றும் அரிய வகை ஆமைகள் என பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகின்றது.
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, அடர்ந்த பச்சை நிற காடுகளுக்கு நடுவே இந்த ஆறு ஒரு மின்னும் நாடா சுருண்டு கிடப்பது போல மிக அழகாகக் காட்சியளிக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்திற்குச் சென்ற மெய்ர் உள்ளிட்ட குழுவினர், அங்கு சுமார் 8 மாதங்கள் தங்கியிருந்து இவ்வாறான பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.