இலங்கை சனத்தொகையில் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
இலங்கை தனது மக்கள் தொகையில் 50 % ஆனவர்களுக்கு முழுயாக தடுப்பூசி போடுவதன் மூலம் கொவிட் -19 க்கு எதிரான வெகுஜன தடுப்பூசி இயக்கத்தில் இன்று ஒரு மைல்கல்லை அடைய தயாராகவுள்ளது.
இது வளர்ந்த நாடுகளுக்கு இரண்டாவது வெற்றி என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கனடா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளிலேயே இத்தகைய சாதனையை பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இவ்வளவு உயர்ந்த இலக்கை அடைந்த பெரும்பாலான நாடுகள் ஜி 7 நாடுகள்.
அவை சில நேரங்களில் தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள். இது சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் அனைவரின் அர்ப்பணிப்புடன் கிடைத்த வெற்றி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.