உலக யோகா கிண்ண போட்டியில் பங்குபெற இந்தியா சென்ற இலங்கை குழாம்
UYSF யோகா அமைப்பின் நான்காவது உலக யோகா கிண்ண போட்டிகள் இன்றைய தினம் (27) நடைபெறவுள்ளது.
இந்தியாவின் டெல்லியில் குறித்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இளம் அணியொன்று இந்தியாவை நோக்கி இன்று புறப்பட்டுச் சென்றது.
UYSF யோகா அமைப்பின் இலங்கையினுடைய தலைவராக செயற்படும் சிவசங்கரி சுப்ரமணியின் தலைமையின் கீழ் 7 பேரை கொண்ட அணியே இந்தியாவை நோக்கிப் பயணித்துள்ளது.

இதேவேளை மூன்றாவது ஆசிய பசுபிக் யோகாசனா சம்பியன்சிப் போட்டிகள் இம்மாதம் 03 ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் சிறப்பாக இடம்பெற்றன.
12 நாடுகள் பங்குபற்றிய இப்போட்டியில் இலங்கை 7 தங்கப் பதக்கங்களையும், 3 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டது.
இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி சென்ற அணியில் பியூமி நிசன்சலா, பயிற்சியாளர்களாக சிவசங்கரி சுப்ரமணியம் மற்றும் சிவசக்தி ஆகியோர் அணியை வழிநடத்தி சென்றனர்.
இப்போட்டியில் 2025 ஆம் ஆண்டுக்கான “yoga Rising award ”விருதினை சிவசங்கரி சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார்.