எரிபொருள் விலை தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்ட முக்கிய தகவல்
நாட்டில் இன்று (16-12-2021) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என வெளியான செய்திகளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) முற்றிலும் நிராகரித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் அவர் பதிவொன்ற பதிவிட்டுள்ளார். அதில், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு என வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று (16-12-2021) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கவுள்ளது எனவும், இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்காக இன்றிரவு 8 மணிக்கு பதில் நிதி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெறவிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.