இலங்கையில் அடுத்தடுத்து சோகத்தை ஏற்படுத்திய துயர சம்பவம்! மேலுமொருவர் உயிரிழப்பு
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மற்றொரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த 70 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்றையதினம் சனிக்கிழமை (19-03-2022) கண்டியில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக கண்டி வத்தேகம பிரதேசத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான செய்திகளுக்கு...
கண்டியில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்!