கண்டியில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்!
இலங்கையில் நேற்றைய தினமும் (19-03-2022) 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
இருப்பினும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் எரிவாயு வரிசைகள் காணப்பட்ட நிலையில் சில இடங்களில் வீதிகளை மறித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக கண்டி வத்தேகம பிரதேசத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதன்போது, எல்லேபொல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த வத்தேகம உடுதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதான மொஹமட் இலியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்தயில் மழையில் நனைந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.