ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கமளித்த இலங்கை!
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) மற்றும் ஐக்கிய நாடுகளின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ரோஸ்மேரி ஏ டிகார்லோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அவர்கள் இருவரும் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது கூட்டத் தொடருக்கு புறம்பாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.
மேலும், சமகால சவால்களை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று பிற்பகல் (24-09-2022) நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில் அமைச்சர் உரையாற்றவுள்ளார்.