இலங்கை கிரிக்கெட்டின் நியமனம் தொடர்பில் பிரபல முன்னாள் வீரர் வெளியிட்ட பதிவு!
இலங்கை கிரிக்கெட் தன்னை ஆலோசகர் களப் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக வெளியான செய்திக்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது X தளத்தில் பதிலளித்துள்ளார்.
x தளத்தில் ஜான்டி ரோட்ஸ் வெளியிட்ட பதிவில்,
அதில், “இது எனக்கு செய்தி மட்டுமே” என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கிரிக்கெட் பயிற்சியாளர்கள், களப் பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோக்களுக்கு மேம்பட்ட பயிற்சிகளை வழங்குவதற்காக ஜான்டி ரோட்ஸுடன் இணைந்து பரத் அருண் மற்றும் அலெக்ஸ் கவுண்டூரி ஆகியோரை ஆலோசகர் பயிற்சியாளர்களாக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (18-01-2024) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hmmmm @ThePapareSports this is news to me #checkyourfacts https://t.co/Ok0kwLsJe4
— Jonty Rhodes (@JontyRhodes8) January 19, 2024