இலங்கையில் மேலும் 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் (12-01-2022) 11 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதையடுத்து இலங்கையில் 5 இலட்சத்து 94 ஆயிரத்தை 319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 ஆயிரத்து 174 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்து 445 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 5 இலட்சத்து 93 ஆயிரத்து 725 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.