இலங்கையில் மேலும் 21 பேர் கொரோனா தொற்றால் பலி!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் 518 பேர் பாதிக்கப்பட்டதோடு நேற்றைய தினம் (15-12-2021) 21 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இதுவரை மொத்தமாக 5இலட்சத்து 77ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14ஆயிரத்து 698 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 16 ஆயிரத்து 288 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 455 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை 395 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 5இலட்சத்து 46ஆயிரத்து 498 பேர் குணமடைந்துள்ளனர்.