மூன்று நாட்களுக்கு பூட்டு; நாளைமுதல் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு !
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அநுரதபுரம் மகாபோதி பகுதிகளில் விசேட பாதுகாப்பு
வெசாக் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமி மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வெசாக் வலயத்தை அண்மித்த பகுதிகளில் நாளை முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுவதோடு சிவில் உடைகளிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவார்கள். பொதுமக்களின் இலகு போக்குவரத்துக்காக பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விசேடமாக அநுரதபுரம் மகாபோதி மற்றும் அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை தவிர மிஹிந்தலை பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மதுபானசாலைககளுக்கு பூட்டு
முக்கிய விகாரைகளை அண்மித்த பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இக் காலப்பகுதியில் மதுபானசாலைகளை மூடுவதை ஒழுங்குபடுத்துவதற்கு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலதிக கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்தார்.