துபாய்க்குத் தப்பிச் சென்ற இஷார செவ்வந்தி; கைது செய்ய சிறப்பு நடவடிக்கை
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஷார செவ்வந்தியைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
சர்வதேச காவல்துறையின் ஆதரவுடன் கொழும்பு குற்றப்பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இஷார செவ்வந்தி துபாய்க்குத் தப்பிச் சென்றதாக கெஹெல்பத்தர பத்மே சமீபத்தில் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பல முக்கியமான உண்மைகளை கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்தியுள்ளார்.