குழந்தைகள் நல மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ; பரிதாபமாக ஆறு குழந்தைகள் பலி
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 6 பிறந்த குழந்தைகள் உயிரிழந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்பு சேவைகள் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துடன் கட்டிடத்தில் இருந்து 12 பிறந்த குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது வென்டிலேட்டரில் உள்ள குழந்தை உட்பட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.