சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Mullaitivu Sri Lanka Police Investigation Sri Lanka Fisherman Court of Appeal of Sri Lanka
By Sahana Jun 04, 2025 07:19 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று (03) இரவு கடல் தொழிலுக்கு சென்ற போது கடலில் அவர்களுடைய வலைகளை விட்டு தொழில் செய்ய முடியாத அளவுக்கு சட்டவிரோத (வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிக்கின்ற) தொழிலாளர்கள் அங்கே கடலில் இருந்த காரணத்தினால் அவர்கள் தங்களது வலைகளுடன் மீன்பிடிக்க முடியாமல் திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

பின்னர், கடற் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் மேலும் சில மீனவர்களை அழைத்து அங்கு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 6 மீன்பிடி படகுகளை கள்ளப்பாடு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களும் கடற்கரைக்கு மீனவர்களால் கொண்டுவரப்பட்ட நிலையில், கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திக்கும் கடப்படையினருக்கும் அறிவித்திருந்த போதிலும், குறித்த இரண்டு தரப்பினரும் அந்த இடத்திற்கு செல்லாத நிலையில் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Shock Awaits 6 People Involved In Illegal Fishing

இந்நிலையில், மீனவர்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்த நிலையில், இரண்டு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகளை தவிர்க்கும் முகமாக 6 மீன்பிடி படகுகளையும் 6 மீனவர்களையும் பொலிஸார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

சிலாபம் பகுதியில் இருந்து வருகை தந்து முல்லைத்தீவில் மீன்படியில் ஈடுபடுகின்ற இரண்டு மீன்பிடி படகுகளும் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு மீன்பிடி படகுகளும் முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு மீன்பிடி படகுகளுமாக 6 மீன்பிடி படகுகளும் 6 மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மீனவர்கள் கள்ளப்பாடு கடற் தொழிலாளர்கள் தங்களுடைய பொருட்களை கொள்ளையிட்டதாக, பொய்யான முறைப்பாடுகளை செய்து தப்பித்துக் கொள்ள முயல்வதாகவும், திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும், சம்பவ இடத்திற்கு வரவில்லை என குழப்பமடைந்து, முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை முதல் முல்லைத்தீவு மீன்பிடி அமைப்புகளின் பிரதிநிதிகள் மீனவர்கள் பலர் திரண்டு இருந்தனர்.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை குறித்து சட்டவிரோத மீனவர்கள் 6 பேரையும் கைது செய்து ஏனைய விடயங்களில் சமாதானத்தை பேணுவதற்கான பிணைப்பொறுப்பு (81) கீழ் இவர்களை முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது கட்சி உறுப்பினர்களை உசார்ப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா!

தனது கட்சி உறுப்பினர்களை உசார்ப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா!

எவ்வாறு இருப்பினும் குறித்த 6 மீன்பிடி படகுகளிலும் சட்டவிரோதமாக வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிப்பதற்கான உபகரணங்கள் பட்டறி லைட் போன்ற பொருட்கள் காணப்பட்டதோடு குறித்த நபர்களுக்கு எதிராக மீன்பிடித் திணைக்களத்தினர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் அவர்களை கேட்டபோது, நேற்றைய தினம் வேறு ஒரு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இருந்த நிலைமையினால் குறித்த இடத்திற்கு செல்ல முடியவில்லை எனவும், பொலிஸார் தொடர்கின்ற வழக்கினை தொடர்ந்து தாங்கள் குறித்த நபர்களை கைது செய்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்திருந்தார்.

வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையை தென்னிலங்கை கட்சிக்கு விட்டுக் கொடுக்க தமிழரசுக் கட்சி இணக்கம்

வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையை தென்னிலங்கை கட்சிக்கு விட்டுக் கொடுக்க தமிழரசுக் கட்சி இணக்கம்

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US