சிதிலமடைந்த முகம்; அடையாளம் காண உதவுங்கள்; பொலிஸார் விடுத்த கோரிக்கை
ஹொரண- கணேதென்ன பொது மயானத்திற்கு அருகிலுள்ள இறப்பர் தோட்டத்தின் காட்டில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கடந்த 07ம் திகதி மீட்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் ஹொரண வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட ஆண் சுமார் 40 - 50 வயதுடைய 05 அடி 08 அங்குலம் உயரமுடையவரென்றும் கழுத்தில் தங்க நிற தர்ம சக்கரம் கறுப்பு நூலில் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் உடலில் மூன்று பச்சை குறிகள் உள்ளதாகவும் இடது கையின் மேல் மணி வடிவிலும்,வலது கை தோளில் S வடிவ பச்சையும் காணப்படுகின்றன.
எனினும் சடலத்தின் முகம் முற்றிலும் சிதைந்து அழுகிய நிலையிலுள்ளதுடன் அவரது ஆண்குறி வெட்டி அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.
இந்த சடலம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் ஹொரண பொலிஸ் நிலையம் – 0342261222 அல்லது, பொலிஸ் தலைமையகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு – 0112436161 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.