மன்னாரில் கரையோர பகுதிகளில் கடல் நீர்; வாழ்வாதாரம் இழந்த மீனவர்கள்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளதனால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக பள்ளிமுனை, பனங்கட்டு கொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இவ்வாறு கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது.

வானிலை குறித்த அறிவுத்தலால் மீனவர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சனிக்கிழமை (10) காலை முதல் மறு அறிவித்தல் வரை கடல் தொழிலுக்குச் செல்லவில்லை.

இன்றைய தினம் அசாதாரண வானிலையால் பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விடத்தல்தீவு துறை ஊடாக கடற்றொழிலுக்கு செல்லும் மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

