அர்ச்சுனா எம்.பி யை கிழித்து தொங்கவிட்ட கௌசல்யா!
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் நடந்துகொள்ளும் விதம் குறித்து ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களிடம் இருந்து நாடாளுமன்ற ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.
நாடாளுமன்றத்தில் கூச்சலிடுவதும், சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று சாப்பிடுவதும் மாத்திரம் ஒரு மக்கள் பிரதிநிதியின் பணி அல்ல என்பதை அர்ச்சுனா எம்.பி புரிந்துகொள்ள வேண்டும் எனச் சாடியுள்ளார்.

ஏனைய உறுப்பினர்களிடம் இருந்து அர்ச்சுனா எம்.பி ஒழுக்கத்தை கற்கவேண்டும்
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (09) நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன ,
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், காலையில் இருந்தே சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்த அவர் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய உறுப்பினர்களிடம் இருந்து ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளுமாறும் கூறினார் .
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக திட்டமிட்ட முறையில் சில தரப்பினர் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, பிரதமர் ஹரினி அமரசூரிய மீது அரசியல் நோக்கில் மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும், இது முறையான விசாரணைகளைத் திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, பிரதமர் மீது மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்ததாகக் குறிப்பிட்டார்.
வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் சைகைகள் மூலம் பிரதமரை அவர் இழிவுபடுத்திய விதம் கண்டிக்கத்தக்கது என்றும், எதிர்க்கட்சியில் உள்ள பெண் உறுப்பினர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களை ஏற்றுக்கொள்கிறார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.
பிரதமருக்கு எதிரான இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் அரசியல் நாகரிகமற்றவை என அவர் கடுமையாகச் சாடினார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளைப் புத்தகத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு சபையை வழிநடத்திவிட முடியாது என்றும், மக்கள் நலன் சார்ந்த விவாதங்களில் கண்ணியத்துடன் கலந்துகொள்வதே சிறந்தது என்றும் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் மையத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
மேலும் அர்ச்சுனா இராமநாதன் போன்ற உறுப்பினர்கள் சபையின் கௌரவத்தைப் பேணக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன வலியுறுத்தினார்.
அதேசமயம் சபையில் ஏற்பட்ட இத்தகைய மோதல் போக்கு மற்றும் காரசாரமான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.