சரிகமப சீனியர் சீசன் 5 ; கண் கலங்க வைத்த ஈழத்து போட்டியாளர்கள்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப சீனியர் சீசன் 5 கோலாகலமாக தொடங்கியுள்ளது. சரிகமப நிகழ்ச்சி பல திறைமையாளிகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.
அதுமட்டுமால்லாது இலங்கை தமிழர்களுக்கும் கள அமைத்துக்கொடுக்கும் மேடையாக சரிகமப நிகழ்ச்சி அமைந்துள்ளது.
கண் கலங்க வைத்த ஈழத்து போட்டியாளர்கள்
புலம்பெயர் தேசத்து தமிழர்கள் முதல் இலங்கையில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டு தம் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இம்முறை ஈழத்தமிழர்கள் மூவர் சரிகமப சீனியர் சீசன் 5 இல கலந்துகொண்டுள்ளனர்.
அந்தவகையில் அம்பாறை பிறதேசத்தில் இருந்து சபேசன், சுவிட்சர்லாந்தில் இருந்து புலம் பெயர் ஈழத்து மகன் பிரஷான் , மற்றும் ஈழத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அம்பாறை பிரதேசத்தில் இருந்து வந்த சபேசன் தான் செலக்ட் ஆனதும் கண்ணீர்விட்டு கதறி அழுதமை நடுவர்களை மட்டுமல்லாது பார்ப்பவர்களின் கண்களையும் குளமாக்கியது.