எல் நினோ குறித்து சஜித் எச்சரிக்கை ; பேரழிவுக்கு முன்பே தயாராக வேண்டும்
சர்வதேச காலநிலை அமைப்புகளின் தரவுகளின்படி 'எல் நினோ' காலநிலையில் மாற்றம் ஏற்படுவது 100 சதவீதம் உறுதியாகியுள்ளதால், பேரழிவைத் தடுப்பதற்கான தயார்நிலையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பேரழிவுகள் நிகழ்ந்த பின்னர் நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்துவதை விடுத்து, முன்னெச்சரிக்கையாக , முன்கூட்டியே தயாராகுவதிலும் பாதிப்புகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாரம்பரியமாக, ஒரு பேரழிவு தாக்கிய பின்னரே இலங்கை அதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது.
பேரழிவு குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படும்போதெல்லாம், அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் முன்கூட்டியே தயாராகுவதற்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.