மத்திய கிழக்கு போர்க்களத்தில் தமிழரின் தியாகம் ; சமூக வலைத்தளங்களில் பரவும் முரண்பட்ட தகவல்கள்
அமெரிக்காவில் சேவையாற்றிய தமிழ் இராணுவச் சிப்பாய் விசாகன் சத்தியமூர்த்தி குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த குழப்பத்திற்கு முக்கிய காரணம் “விசாகன் சத்தியமூர்த்தி” என்ற ஒரே பெயரில் இரு வேறு நபர்கள் பற்றிய தகவல்கள் கலந்துவிடுதலாகும்.
முதல் நபர், 1964 அக்டோபர் 31 ஆம் திகதி பிறந்தவர். இவர் 1993 ஆம் ஆண்டு 29 வயதில் அமெரிக்க இராணுவத்தில் இணைந்து சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
Sergeant First Class (SFC) என்ற பதவிவரை உயர்ந்து, Army Commendation Medal மற்றும் Army Achievement Medal போன்ற விருதுகளை பலமுறை பெற்றுள்ளார். பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், 2014 மார்ச் 21 ஆம் தேதி 49 வயதில் உயிரிழந்தார்.

இவரது உடல் Los Angeles National Cemetery-யில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டாவது நபர், 1993 மே 10 ஆம் தேதி தமிழகம் மதுரையில் பிறந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் அமெரிக்க இராணுவத்தில் இணைந்திருந்ததாக சமூக வலைத்தள தகவல்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் பதிவுகள் மூலம் அறியப்படுகிறது. 2026 மார்ச் 21 ஆம் தேதி இவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது இறுதிச்சடங்கு 2016 ஏப்ரல் 2 அன்று நடைபெற்றதாகவும் சில பதிவுகள் குறிப்பிடுகின்றன (இந்தத் தகவல்களில் காலவரிசை தொடர்பான முரண்பாடுகள் காணப்படுகின்றன).
இந்த இரு நபர்களின் தகவல்களை சரியாக உறுதிப்படுத்தாமல் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளே தற்போதைய குழப்பத்திற்கு காரணமாகியுள்ளது.
குறிப்பாக, 1993 ஆம் ஆண்டைச் சுற்றிய தகவல்கள் தவறாக இணைக்கப்பட்டதால், இரண்டாவது நபர் 1993 இல் இராணுவத்தில் இணைந்ததாக தவறான தகவல்கள் பரவியுள்ளன.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
சிலர் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும், சிலர் இத்தகவல்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் கூறுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிரும்போது அவற்றை உறுதிப்படுத்திக் கொண்டு பகிர்வது அவசியம் என்பதை இச்சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.