இலங்கைக்கு வாகன இறக்குமதியால் குவிந்த வருமானம்!
நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (20) பாராளுமன்றத்தில் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு 3% வரி சேர்க்கப்படுவதாகவும், 5 மாத காலப்பகுதிக்குள் இது சுமார் 45% வரை அதிகரிப்பதாகவும், இதனால் நுகர்வோரே அந்த மேலதிக பணத்தைச் செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
ரோஹித அபேகுணவர்தன கேள்விக்கு பதிலளித்த பிரதியமைச்சர், வாகன இறக்குமதியின்போது இறக்குமதியாளர்கள் மீது இந்த மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளமையானது, நாட்டிற்குள் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் குறிப்பிட்டுள்ளார்.