தமிழர் பகுதியில் தாயை பாதுகாக்க சென்று உயிரை துறந்த இளைஞன் ; உறவினர்களால் இரவில் நடத்தப்பட்ட கொடூரம்
ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் 2026.06.06 ஆம் திகதி இரவு வேளையில், தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இக்கொலைச் சம்பவத்தில் மரணமடைந்தவர் நாவற்குளம், ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

மரணமடைந்தவரின் தாயாருக்கும் உறவினர்கள் குழுவொன்றுக்கும் இடையில் நாவற்குளம் கோவிலுக்கு அருகில் ஏற்பட்ட தகராறைச் சமரசம் செய்ய முற்பட்டபோதே, அந்த உறவினர்கள் குழுவில் இருந்த நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக்கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பலியானவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.