ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு இது தான் காரணமா?

Horoscope Astrology Hinduism
By Sahana Jul 21, 2025 12:40 AM GMT
Report

ஆடி மாதம் பிறந்து விட்டாலே அனைத்து அம்மன் கோவில்களிலும், குறிப்பாக மாரியம்மன் கோவில்களில் விழா எடுத்து கொண்டாடுகிறார்கள்.

ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு இது தான் காரணமா? | Reason For Worshipping Amman In The Month Of Aadi

கூழ் ஊற்றுவது, பொங்கல் வைப்பது, விரதம் இருப்பது, பொங்கல் வைப்பது, மாவிளக்கு வைப்பது, தீ மிதிப்பது என ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அம்மனை வழிபடுகிறார்கள். அம்மனின் அருளை பெறுவதற்காக பலரும் விரதம் இருந்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது உண்டு.

ஆடி மாதத்தில் மட்டும் அம்மனை இவ்வளவு சிறப்பாக விழா எடுத்து கொண்டாடுவதற்கு என்ன காரணம்? ஆடி மாதத்திற்கும் அம்மன் வழிபாட்டிற்கும் அப்படி என்ன தொடர்பு இருக்கிறது என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம். 

ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு இது தான் காரணமா? | Reason For Worshipping Amman In The Month Of Aadi

ஆடி மாத வழிபாட்டு கதை 

ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு புராணங்களில் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது, தன்னுடைய தவத்தின் வலிமையால் தேவர்களிடம் இருந்து தெய்வாம்சம் கொண்ட பசுவான காமதேனுவை வரமாக பெற்றவர் ஜமதக்னி முனிவர்.

பாற்கடலில் இருந்து தோன்றி, கேட்பவர்களுக்கு கேட்கும் வரங்களை குறைவில்லாமல் அள்ளிக் கொடுக்கும் தன்மை கொண்டது தான் காமதேனு.

ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு இது தான் காரணமா? | Reason For Worshipping Amman In The Month Of Aadi

இதை தேவர்களிடம் இருந்து பெற்று, தன்னுடைய ஆசிரமத்திற்கு வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் உணவுகளை அளித்து உபசரித்து வந்தால் ஜமதக்னி முனிவர்.

இவரின் மனைவி தான் ரேணுகா தேவி. ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக பிறந்தவர் தான் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக பிறந்த பரசுராமர்.

ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு இது தான் காரணமா? | Reason For Worshipping Amman In The Month Of Aadi

சப்தரிஷிகளில் ஒருவராக விளங்கும் ஜமதக்னி முனிவரிடம் இருக்கும் காமதேனுவின் அற்புத மகிமையை தெரிந்து கொண்ட கார்த்தவீரிய அர்ஜூனனின் மகன்கள், காமதேனுவை தங்கள் வசமாக்க திட்டமிடுகிறார்கள். காமதேனுவை தங்களிடம் ஒப்படைக்கும் படி ஜமதக்னி முனிவருக்கு அவர்கள் உத்தரவிடுகிறார்கள்.

அதை தர அவர் மறுத்ததால், முனிவரை கொன்று விட்டு, காமதேனுவை அவரிடம் இருந்து அபகரித்து செல்கிறார்கள். பதிவிரதையான ரேணுகா தேவி, தனது கணவர் கொல்லப்பட்ட உடன், தனது உயிரை விட நினைத்து, தீ மூட்டி அதில் குதிக்கிறாள்.

ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு இது தான் காரணமா? | Reason For Worshipping Amman In The Month Of Aadi

ஆனால் தெய்வாம்சம் கொண்ட பத்தினி பெண்ணான அவளின் பெருமைகளை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என நினைத்த தேவர்களின் தலைவனான இந்திரன், வருண பகவானை மழையாக பெய்யும் படி சொல்கிறார்.

மழை பெய்து ரேணுகா தேவியின் உடலை எரித்த நெருப்பை அணைக்கிறது. உடலில் தீக்காயங்கள் மற்றும் பொப்புளங்களால் வேதனைப்பட்ட ரேணுகா தேவிக்கு அப்பகுதியில் வசித்த மக்கள் வேப்பிலையால் விசிறி அவளின் உடல் எரிச்சலை போக்குகிறார்கள். அவளுக்கு கூழ், இளநீர் போன்றவற்றை உணவாக கொடுத்து அவளின் நோயை குணமாக்க முயற்சிக்கிறார்கள்.

இருந்தும் தீக்கொப்புளங்களால் வேதனைப்பட்ட ரேணுகா தேவி முன் தோன்றிய சிவ பெருமான், பார்வதியின் அம்சமாக விளங்கும் உனக்கும் நோய்களை தீர்க்கும் தன்மையை வரமாக தருகிறார் சிவ பெருமான்.

ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு இது தான் காரணமா? | Reason For Worshipping Amman In The Month Of Aadi

ரேணுகா தேவியும் தெய்வமாக இருந்து தன்னை வணங்குபவர்களின் நோய்கள் அனைத்தையும் போக்கி, தாயாக இருந்து வேண்டும் வரங்களை அளிக்கிறாள்.

ரேணுகா தேவியே ஊர் காவல் தெய்வமாக எல்லையம்மனாகவும், மாரியம்மனாகவும் பல இடங்களில் கோவில் கொண்டு அருள் புரிகிறாள். ரேணுகா தேவிக்கு சிவ பெருமான் வரமளித்த ஆடி மாதமே அவளை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக மாறியது.

அன்று முதல் ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் முக்கியத்துவம் சிறப்பு மிகுந்ததாக மாறியது.

ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு இது தான் காரணமா? | Reason For Worshipping Amman In The Month Of Aadi

நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US