கஞ்சன விஜேசேகரவின் சவாலை ஏற்ற அனுரகுமார திசாநாயக்க
மின்சக்தி துறை கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (12) விடுத்த சவாலுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று பதிலளித்தார்.
அமைச்சரால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு தமது கட்சி தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மின்சார சபை, எண்ணெய் ஒப்பந்தங்கள், நிலக்கரி ஒப்பந்தங்கள், சூரியசக்தி ஒப்பந்தங்கள் தொடர்பான விவாதத்திற்கு தாம் தயார் என்பதை நினைவூட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இன்று (13) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
எனினும், அனுரகுமார திசாநாயக்க கூறியதை போன்று அவருக்கு பதிலாக வசந்த சமரசிங்க விவாதத்தில் கலந்துகொள்வாராயின், தமக்கு பதிலாக வேறொருவர் இந்த விவாதத்தில் பங்கேற்பார் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறினார்.