ராஜபக்சர்களுடன் ரணில் நடத்திய மந்திராலோசனை குறித்து வெளியான தகவல்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சிக்கு ஆதரவு வழங்கிய 69 லட்சம் மக்கள் அரச சொத்துக்களை விற்று அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்காக அல்ல என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியுடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட சந்திப்பில் அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு பெஜெட் வீதி இல்லத்தில் இடம்பெற்றது.
இரு தரப்பினருக்கும் இடையில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன் சாகல ரத்நாயக்கவும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் இணைந்துகொண்டார்.
தமது கட்சிக்கு ஆணை கிடைத்த போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகளை பூர்த்தி செய்யும் வகையில் அரச சொத்துக்கள் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில், ராஜபக்ச சகோதரர்கள் எதிர்வரும் தேர்தல் அட்டவணை குறித்தும் கலந்துரையாடியுள்ளனர் என்பதுடன், அது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆனால் இந்த கூட்டம் எந்த முடிவும் எடுக்காமல் முடிந்துவிட்டதென குறிப்பிடப்படுகின்றது.