புத்தளத்தில் இரவு கோர விபத்து: இளைஞனுக்கு நேர்ந்த நிலை!
புத்தளம் – பாலாவி வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் புத்தளம் – பாலாவி வீதியில் தில்லையடி ஜூம்ஆப் பள்ளிக்கு முன்பாக இன்று (31-12-2021) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து குறித்து தெரியவருவதாவது, புத்தளத்திலிருந்து பாலாவி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துக்கொண்டிருந்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் பயணித்த வேன் மற்றும் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஆகிவற்றிடன் மோதியதில் இடம்பெற்றது.
இவ்விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் மக்கள் ஒன்றுகூடியதால் சிறியளவில் பதற்ற நிலையும் ஏற்பட்டதுடன், வாகன நெரிசலும் காணப்பட்டது.
இருப்பினும், புத்தளம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேவேளை குறித்த விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள், வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஆகிய மூன்று வாகனங்களும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.