பயங்கரவாத தடைச் சட்டம் ; அரசாங்கத்திற்கு அழுத்தம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவால் மொஹமட் ருஸ்டி என்ற இளைஞர்,
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் தங்களால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அண்மையில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டது.
எந்தவொரு குற்றத்திற்கும் ஆதாரங்கள் இல்லாத போதிலும், ருஸ்டியை 14 நாட்கள் தடுத்து வைத்து, 'மதரீதியான கடும்போக்காளர்' என சித்தரிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது.
அத்துடன், விடுவிக்கப்பட்டவுடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவில் வாராந்தம் முன்னிலையாதல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் வைக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கைகள் ருஸ்டியின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.