புத்தளத்தில் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில்... வெளியான திகதி!
இலங்கை ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புத்தளம் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13-09-2024) புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி ரணிலின் புத்தளம் வருகையை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (09-09-2024) புத்தளம் நகர சபை விளையாட்டு மைதான கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்கும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக மாயாதுன்ன ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.