இந்திய வானூர்தி நிலையத்தில் திடீர் தீ விபத்து ; அலறியடித்து ஓட்டிய பயணிகள்
மும்பை சர்வதேச வானூர்தி நிலையத்தின் முதலாவது பிரிவில் நேற்று (09) மாலை 6:10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தினால், தரைத்தளத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார கட்டமைப்பு உள்ளிட்ட பகுதிகளில் தீ பரவியது.

இதனால் வளாகம் முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்பட்டது, இது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து விரைந்து வந்த மும்பை தீயணைப்பு படையினர், காவல்துறை மற்றும் வார்டு ஊழியர்கள் இணைந்து சில நிமிடங்களிலேயே தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்து காரணமாக வானூர்தி நிலையச் செயல்பாடுகளுக்கோ அல்லது வானூர்தி போக்குவரத்திற்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.