ஜனாதிபதி ரணிலுக்கு பரிசாக கிடைத்த பச்சை ஆப்பிள்!(Photos)
இலங்கையில் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் ( Green apple plantation ) முதல் அறுவடை இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
லக்ஷ்மன் குமாரவின் , கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள இரண்டு ஏக்கர் காணியில் இந்த பச்சை ஆப்பிள் பயிரிட்டுள்ளது.
இதன்போது பண்ணையாளரின் ஆப்பிள் பண்ணை குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்வரும் காலங்களில் அந்தப் பண்ணையை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆப்பிள் விதைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், முறையான பரிசோதனையின் பின்னரே ஆப்பிள் சாகுபடியை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் லக்ஸ்மன் குமார ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பயிர்ச் செய்கையை பிரபலப்படுத்துவதற்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்து வழங்க முடியும் எனவும், இலங்கையின் எந்தப் பகுதியிலும் பயிரிடக் கூடிய வகையில் இந்த விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச மற்றும் பீ.ஜே.அசங்க லயனல் ஆகியோர் கலந்துகொண்டனர்.